Friday, June 21, 2019

இரவின் மடியில்!



கருமை எங்கும் பொங்கி  மேலிட - வானில்
இளமை பொங்கும் வெள்ளி நீந்திட - கூடும்
இனிமை கொஞ்சும் கோடி நட்சத்திரம் - நோக்கும்
மழலை நெஞ்சம் நாடி பிடித்திடத் துடித்திடும்!

Sunday, June 09, 2019

இந்த அநியாயத்த எங்க போய் சொல்ல


தோழியர் இருவரும் ஒன்றாக கதை பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு அலைபேசி அழைப்பு.
“அம்மா, வீடு தெறந்து இருக்கு. அக்கா வீட்ட பூட்டாமலேயே போய்ட்டா போல இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று எதிர் முனையிலிருந்து குழந்தை கூற, உடனே அக்காவை  வரச்சொல்வதாகவும் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கிறதா என்பதை சரி பார்க்கும்படியும் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு மூத்தவளுக்கு உடனே அழைத்து சரமாரியாக அர்ச்சனை செய்தாள் மாலினி.
‘இவ்வளவு பெரிய பொண்ணா இருக்க, வீட்ட ஒழுங்கா பூட்டீட்டு போகணும்னு தெரியாதா? பூட்டி முடிச்சதும் இழுத்துப் பார்த்துட்டுதானே நகரணும்னு படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி  சொல்லி இருக்கேனில்ல? இப்ப வீடு திறந்திருக்குனு பாப்பா கால் பண்றா. அவ வேற பயந்துட்டு இருக்கா. சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டு திருடன் எவனாச்சும் வந்துட்டு போன அடையாளம் இருக்கானு பாத்துட்டு சொல்லு’ என்று இடி விழுந்தார்போல் முழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்து பின் அருகிலிருந்த கீதாவி்டம் புலம்ப ஆரம்பித்தாள்.
"இந்த பொண்ணுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒரே விளையாட்டுத்தனம்தான்.  ரொம்ப அசால்ட்டா இருக்கா, அ்ப்டியே அவங்க அப்பா மாதிரி" என்று அவளது கணவனையும் சைக்கிள் கேப்பில் திட்டிவிட்டு, பின்னர் இளையவளுக்கு அழைத்து மூத்தவள் வருவதை சொல்லிவிட்டு அப்படியே வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பதையும் குழந்தையிடம் கேட்டு  உறுதி செய்து கொண்டு மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினர். அவர்கள் சாப்பிடும் வேளையில் கொஞ்சம் கொசுவர்த்திச்  சுருள்கள் சுழல ஃபளாஷ் பேக் பார்க்கலாம்.

Friday, June 07, 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்...


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.

Monday, June 03, 2019

மௌனத்தில்...



மொழி பேச மறுதலிக்கும்  நேரங்களில்
இதயம் பேசிவி்டும் ஏகாந்த மௌனத்தில்...
 
இதழோரம் வார்த்தைகள் சரமாகத்  தேங்கியும்
உணர்வுகள் மட்டும் கதை  பேசட்டும் என்று;

Thursday, May 30, 2019

தொலையும் நெருக்கம்!



ஒற்றைச் சந்திப்பில்
என்னைப் புதிதாக்கி
எனக்குள் புதிதாகிறாய்
புரியாப் புதிராகி
அவிழாப் புதிராக்கினாய்!

Popular Posts