Monday, January 07, 2019

சாதனை ஆக்கிடடா!



கிழக்கே உதித்திடும் கதிரவன் - அவன்
திடமாய் உணர்த்திடும் ரகசியம், - நாம்
அழைத்தே  அறிவிப்பு    செய்குவோம் - அதை
மனதில் பதித்திடு தினந்தினம்!


இருட்டே விலகிடும் நாள்தோறும் - அது
நடக்கும் மகிழ்ந்திரு உள்ளளவும், - இக்
கருத்தை தந்திடும் பாங்குடனே - செஞ்
சுடரும் வானில்  தோன்றுதடா!

உறக்கம் தவிர்த்திடும் கனவதுவே - மனச்
சுணக்கம் அகற்றிடும் சரிவினிலே - அங்கு
பிறக்கும் உணர்வினில் புதுத்தெம்பே - மடை
திறக்கும் இலக்கினை அடைவதற்கே!
     
செழுமையும் வளமையும் உனக்கெனவே -  இவ்
உலகில் தோன்றிடும் எப்பொழுதும், - நீ
அழுகையும் சோர்வையும் விட்டுவிடு - ஆடும்
களத்தினில் இறங்கிடு துணிவுடனே!

நிலத்தே விழுந்திடும் விதையதுதான் - நிழல்
மரத்தே கொடுத்திடும் கனியமுதும் - எண்ணி
அகத்தே பதித்திடும் இலக்கதுதான் - ஒளி
முகத்தை உலகிற்குக் காட்டிடுமே!

அழகுக்கு பிறப்பிடம் நீயேதான் - உயர்
அறிவுக்கு உறைவிடம் நீயேதான், - எந்த
வழக்கையும் எதிர்த்தே போராடு - இந்த
வாழ்க்கையே உன் கையில் விளையாடு!   

  -கவிப்பூரணி

4 comments:

  1. Awesome view on Sun shine! if everyone read this poem and feel the lines, Undeniably all days will be Fine!
    Super Mam.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு ஃபெர்னான்டஸ்...

      Delete
  2. Nice lines....but I am not capable of intrepreting these lines..... beyond the grasp of imagination.

    ReplyDelete
    Replies
    1. actually Naveen, I suppose that Its always enough to feel than to interpret. Thanks.

      Delete

Popular Posts