Monday, February 25, 2019

இதயவீணை!



காட்டாற்று வெள்ளமென பாய்ந்தோடும் சிந்தனையில் - பரவும்
ஏகாந்தம் தென்றலிடை பாய்போடும் வண்டினங்கள் - விரவும்
தீந்தேனில் முழுகிவிட எத்தனிக்கும் வேளையிலே - நிலவில்
காய்ந்தோங்கும் வெள்ளியலை புள்ளியிட்டு கோலமிட - மலரும்
தேன்தோய்ந்த செங்கமலம் அரும்பெடுத்த நொடிதனிலே - உலவும்
மீன்போன்ற கண்ணிரண்டில் கசிந்தொழுகும் நீர்த்துளிகள் - விலகும்
நீ தீண்டும் கணப்பொழுதில் இனித்துவிடும் அதிசயமோ? 

Thursday, February 14, 2019

என்னைத் தொலைத்து!

பயனற்ற தரிசு நிலமாய்
நினைவற்று  நான்  இருக்க
தூரலின் துளி ஒன்றாய்
நனைத்தாய் என நினைத்திருக்க 

Monday, February 11, 2019

மெய் அன்பு!



மெல்லிசையின் சுகம் கலந்து
கைபேசி  மெலிதாய்  சிணுங்குகையில்
விழித்திரையில் மட்டுமல்ல
உன்  நினைவுகள் ஊற்றெடுக்கும்
என்   மனத்திரையிலும்
காட்டாற்று வெள்ளமாய்
உன் பிம்பம் நிழலாட,
ஊர் எல்லைகள் கடந்தும்
வேர் பற்றிய நிலமாக
மனதினை சில்லெனப் பற்றி
அன்பை காலமறியாமல் 
அனல் மூட்டி பற்ற வைத்து,
நீ நடத்தி்டும் இன்ப வேள்வியில்
நிலை தடுமாறி நா பேச்சிழக்க,
மௌனம் இ்தயத்தின்   மொழியாக,
அலைக்கற்றையின் இணைப்பதனில்
இணைகின்றன அன்பால்  இதயங்கள்!

Friday, February 08, 2019

கைத்தளம் பற்றி!

வெற்றிடமாய்    வெளியதனை ஒத்திருந்த வாழ்வதனில் - பசுமைமிகு
வெற்றிலையின் உட்செலுத்தும் சுண்ணமுடன் பாக்கெனவே - பெருமைமிகு
கற்றறிந்தோர்  சபையதனில் அரங்கேறும் படைப்பெனவே - இனிமைதரும்

Monday, February 04, 2019

மௌனம்!

தொலையாது தவிர்த்திட
ஓடி ஒளிகி்றார்
தொலைக்காட்சிக்குள்
தொங்கிக் கொண்டு

Popular Posts